அஜித்தின் நடிக்கும் ஏகே62 பட விவகாரம் ஜவ்வு மாதிரி நீண்டு கொண்டே போகிறது. படத்தின் அப்டேட் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடிக்காததால், அந்த திட்டத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதை அஜித்திற்கு நெருக்கப்பட்ட வட்டாரங்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி, விஷ்ணுவர்தன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ரேஸில் மகிழ்திருமேனி முந்திக்கொண்டார். கிட்டத்தட்ட அவரை வைத்து ஏகே62 எடுக்கப்படும் என்பது 90 சதவிகிதம் முடிவாகிவிட்டதாம். இன்னும் இழுப்பறி நீடிப்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்போதைக்கு தீபாவளிக்குள் படம் ரிலீசாக வேண்டும் என்பதால் விக்னேஷ் சிவனின் கதைக்கு அஜித்தால் கால்ஷீட் கொடுக்கவில்லை என சப்பை கட்டு கட்டுறாங்க.
உண்மையில் பிரபல அரசியல் வாரிசின் பரிந்துரையின் பேரில், விக்கி நீக்கப்பட்டு மகிழ்திருமேனி உள்ளே கொண்டு வரப்பட்டிருக்கிறார். இதனால் தான் எந்த தகவலும் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டதாக சொல்றாங்க. விக்கி மேல் அந்த அரசியல் பிரபலத்திற்கு அப்படி என்ன கோவமோ, தாபமோ; இப்படி சினிமா கேரியரில் தலையிட்டு விளையாடுறாங்க. எப்படியோ நயன் சப்போர்ட் இருப்பதால், விக்கி பிழைத்துக்கொண்டார்.