notification 20
Daily News
எலி பேஸ்ட் எந்த அளவுக்கு வீரியமானது? அரசாங்கமே பயப்படும் அளவுக்கு அதி பயங்கரமானதா? ஒருத்தர் கூட பிழைக்கவில்லையாம்!

எலி பேஸ்ட் பற்றி மருத்துவமனையில் பணியாற்றும் நண்பர் ஒருத்தர் திகிலூட்டும் விதமாக சொல்கிறார். எலி பேஸ்ட் சாப்பிட்டு மருத்துவமனை வந்து பிழைத்தவர்களை பார்த்ததே இல்லை என்கிறார். கடைகளில் சுலபமாக கிடைக்கும் எலி பேஸ்ட் வாங்கி தக்காளி மற்றும் வாழைப்பழங்களில் தடவி எலிகளுக்கு வைக்கின்றனர். எலி சாப்பிட்ட உடனே இறந்துவிடும். ஒரு சிலர் விபரீத முடிவு எடுக்க இதனை சாப்பிடுகின்றனர். 

சுற்றி இருக்கிறவார்கள் எப்படியாவது நம்மை காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரை விட்டவர்கள் ஏராளம். சிலர் எலி பேஸ்ட் சாப்பிட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவார்கள். அவர்கள் உடலில் ஒவ்வொரு பாகமாக கல்லீரல் மற்றும்செயலிழந்து டாயலிசிஸ் செய்யும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு 4 அல்லது 7 நாட்களில் இறப்பு வரும். மிகச்சிலரே ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு இறப்பார்கள்.  ஒரு சிலர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்திருக்கும். 

உண்மையில் அவர்கள் எலி பேஸ்ட் வாயில் வைத்து பின்னர் துப்பியவர்களாக இருப்பார்கள்.  சாவு பயத்தில் சிகிச்சை பெற வந்திருப்பார்கள். அப்படி வருபவர்கள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். ஆகவே எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு இதுவரை யாருமே உயிர் பிழைத்த அதிசயம் நடந்தது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதன் வீரியத்தை உணர்ந்து அரசே தடை செய்துவிட்டது. 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts