notification 20
Daily News
ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தவனுக்கு இவ்வளோ தைரியம் எப்படி வந்தது? இந்த வீடியோ பாருங்க! எவ்வளோ திமிருன்னு புரியும்!

டெல்லி நொய்டாவை சேர்ந்த நீரஜ் சிங் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நீரஜ்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவருடன் பணியாற்றிய பெண் குற்றம் சாட்டினார். வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்து தலைமறைவாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு நீரஜ் வந்ததாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை அறிந்து தப்பி ஓட முயன்றார். சிசிடிவி காட்சிகளில், சிங்கின் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியே வரும்போது வேகமாக திரும்புவதை காணலாம். ஒரு போலீஸ் அதிகாரி பின்னால் துரத்தும்போது, ​​கார் வாயிலில் இருந்த காவலாளியின் மீது மோதுகிறது. சுற்றி 10 போலீசார் துரத்தியும் அவர்கள் மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பினார். 

இதில் அசோக் மாவி என்ற பாதுகாவலரின் தோள்பட்டை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது புகாரின் பேரில், சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279, 427 மற்றும் 338 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தப்பி ஓடிய நீரஜ் சிங்கை தேடி வருகின்றனர். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts