தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வாரிசு படம் தயாராகியுள்ளது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியுள்ளார். வரும் பொங்கல் அன்று அஜித் நடித்துள்ள துணிவு படத்துடன் வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த வாரிசு படத்துக்கும், துணிவு படத்துக்கும் ஒரே அளவிலான திரையரங்குகளை ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.
விஜய் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் தெரியுமா, அவருக்கு எப்படி அஜித்துக்கு சமமான திரைகளை ஒதுக்க முடியும், இன்னும் நிறைய திரையரங்குகள் ஒதுக்குங்கள் என்று தில் ராஜு உதயநிதியிடம் கேட்பதற்காக சென்னை வரப்போகிறார். இப்போது வாரிசு படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த வாரிசு படத்தின் கதையை மகேஷ் பாபுவிடம் தான் இயக்குனர் சொல்லியுள்ளார். அந்த கதையில் நடிக்க மகேஷ் பாபு விரும்பாததால் அந்த கதை ராம் சரணிடம் சென்றுள்ளது. ராம் சரண் ஷங்கர் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடித்து வருவதால் அவரும் வாரிசு கதைக்கு நோ சொல்லிவிட்டார். பின்னர் பிரபாஸ், அல்லு அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
எல்லோருமே சொல்லி வைத்ததை போல இந்த படத்துக்கு நோ சொன்னதால் கடைசியில் நடிகர் விஜய் இந்த வாரிசு கதைக்கு ஓகே சொல்லி நடித்து முடித்துள்ளார். படம் வந்த பிறகு தான் தெரியும் உண்மையில் தில் ராஜு கொடுக்கும் பில்டப்க்கு வாரிசு படம் ஒர்த்தா என்று.