தலைக்கு இவ்வளோ ரூபாய் என வசூலித்து உள்ளே விடும் ஹோட்டல்கள் என்றால், கொஞ்சம் உஷாராவே இருங்க. ஒருத்தருக்கு 700 ரூபாய், உள்ளே சென்றால், எவ்வளோ வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பார்கள். அந்த ஒரு வார்த்தையை நம்பி ஏமாந்து விட வேண்டாம். முக்கி முக்கி சாப்பிட்டாலும், நம்முடைய வயிறு ஒரு கிலோவுக்கு மேல் எடுத்துக்கொள்ளாது. ஒரு சிலர் ஒரு கிலோவுக்கும் மேல் சாப்பிடுவாங்க. அவங்களை எல்லாம் இந்த லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம்.
நாங்க ஐந்து பேர் போனோம். ஒருவருக்கு 700 என்றால், 3500 ரூபாய் முதலிலேயே கட்டிவிட வேண்டும். உள்ளே போனதும் ஜூஸ் கொடுத்தாங்க. அதனை குடித்த உடனே கால் வயிறு நிரம்பியது. அதற்கு அடுத்து பானி பூரி, சில்லி, மசால் அயிட்டங்கள் அதற்கு அடுத்து இருந்தது. எங்க கேங் ரெண்டு பேர் அவங்க கொடுப்பதை ஒன்று விடாமல் தின்று தீர்த்தனர். கடைசியில் சிக்கன் ஸ்டார்ட்டர் உணவுகள் கொண்டு வருவதற்குள் அவங்க வயிறு நிரம்பிவிட்டது. மிஞ்சிப்போனால் 200 ரூபாய் மதிப்புள்ள உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டு இருப்பாங்க. ஆனால் நாங்க கொடுத்த தொகை 700. இனி எப்போ போனாலும், விலை உயர்ந்த உணவு வகைகளில் கவனம் செலுத்துங்கள்.
சாப்பிட தொடங்கும் முன்பே சூப், ஸ்டார்ட்டர் எனும் பெயரில் அப்பள வகைகள், பானிபூரி போன்றவை கொடுத்து வயிற்றை நிறைத்து விடுகின்றனர். பொதுவாக இவ்வாறான அன்லிமிட்டெட் பஃபேகளில் தயாரிக்கப்படும் உணவுகள் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கமாட்டார்கள். அத்தோடு அதைத் தயாரிக்க அதிக சம்பளம் வாங்கும் தொழில் முறை சமையல்காரரை பயன்படுத்த மாட்டார்கள். இறுதியாக என்ன தான் சுவையாகச் சமைக்க முடிந்தாலும் இயலுமானவரை சுவையைக் குறைத்தே சமைப்பார்கள்.
அதுமட்டுமல்ல தினமும் பெருமளவில் சமைப்பதால் தானியங்கள், மரக்கறிகறிகள், இறைச்சிகளை மாதக்கணக்கில் நாட்கணக்கில் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் இருக்காது. வாங்கும் பொருட்கள் விரைவில் தீர்ந்து விடுவதால் பெரிய பாதுகாப்பு வசதி , குளிருட்டி வசதிகள் தேவையில்லை. அதனால் மின்சாரம், கட்டட வாடகை பராமரிப்புச் செலவு போன்ற பெரியளவிலான செலவுகள் குறைக்கப்பட்டு விடும். அந்தக் காரணங்கள் மூலம் அன்லிமிட்டெட் பஃபே வழங்கும் கடைகள் பொருமளவு பணத்தை சேமிக்கின்றன. அதனால் அவர்களுக்கு பணமிழப்பு ஏற்பட வாய்புக்கள் இல்லை