இப்போதைய டீவி சேனல்கள் TRP என்னும் ஒன்றை வைத்துக் கொண்டு அடிக்கும் கூத்து, சகிக்க முடியாது. நிகழ்ச்சியில் பாடும் சிறு குழந்தைகள், பதின் வயது பருவத்தினர் , யாவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில், குத்தாட்டம் போட வைப்பது போன்றவை எல்லாவற்றிலும் மோசம். விஜய் டிவி பல்வேறு கோணல்கள் நிறைந்த சேனல். சலித்து போன முகங்கள்,சப்பையான சீரியல், தேவை இல்லாத மினி பைட்ஸ். என்னமோ எங்களை விட பெரிய சேனல் இல்லை என்ற அகம்பாவத்துடன் சென்று கொண்டுள்ளது.
நகைச்சுவையை இவர்களை விட உலகில் யாராலும் கேவலப்படுத்த முடியாது. உருவக்கேலி அப்பட்டமாக நடக்கும். எனக்கு விஜய் டிவி ஒரு காலத்தில் பிடித்தது. இப்போது இரு நபர்களின் உணர்வுகளை வைத்து விளையாடுவது போல இருக்கிறது. உரிமையாளர்களின் ரசனைக் குறைந்ததால் நிகழ்ச்சிகளின் தரமும் குறைந்துள்ளது. TRP ஏறினால் போதும் என்ற கணக்கு மட்டும் தான் அவங்க மண்டையில் ஓடும்.
நேரடி ஒளிபரப்பு இல்லாமல், படம் பிடித்துவிட்டு, பின்னர் நிகழ்ச்சி சுவையாக இருக்க, வேண்டுமென்றே, நடிகர்கள் அழுவதும், வீம்பு செய்வதும், வெளியேறுவதும், அடிக்க திட்டச் செய்து அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியை சுவாரஸ்யம் கூட்டும் போக்கு அதிகரித்துவிட்டது. அன்னைக்கு அடுத்தவன் வீட்டு சண்டையை எட்டி பார்ப்பதில் ஆர்வம் காட்டிய மக்கள், இன்னைக்கு டீவியில் அதனை பார்க்க விரும்புகின்றனர். அவ்வளோ தான் வித்தியாசம்.