கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் அலெக்ஸ். 21 வயதாகிறது. ஐ.டி.ஐ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கி வேலைக்கு போகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெர்சலின் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் பழக்கமானது.
நாளடைவில் நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. தனிமையில் சந்திக்க முடிவெடுத்த இருவரும், அலெக்ஸ் தங்கி இருந்த அறை அருகே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு வந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் வந்தது. அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் வேகமாக வந்த ரயில் மோதியதில் அலெக்ஸ், ஜெர்சலின் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். போலீஸ் விசாரணையின் படி, மின்சார ரெயில் வந்ததால் தண்டாளத்தை கடந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் பள்ளமாக இருந்ததால் தண்டவாளத்தைெயாட்டி ஓரமாக நின்றபோது மின்சார ரெயில் மோதி பலியானது தெரிய வந்துள்ளது.