notification 20
Lushgreen
சென்டிமென்ட்டாக ரஜினியை பதம் பார்க்கும் விஷயம்! இந்த பிரச்சனையில் இருந்து ரஜினி எப்படி மீண்டு வருவார்?

நேத்து, இன்னைக்கு இல்லீங்க கிட்டத்தட்ட 45 வருடங்களாக தமிழ் சினிமாவை ராஜ்ஜியம் செய்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயசுலயும் ரஜினிகாந்த் திரையில் தோன்றினால் அவரின் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்ய கோடிக்கணக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் காத்திருக்கிறார்கள். அரசியலைத் தாண்டி ரஜினிகாந்த் நல்ல மனிதர்.

எந்த விழாவில் கலந்து கொண்டாலும் தன்னை வாழ வைத்த தமிழ் ரசிகர்கள் என்ற வார்த்தையை ஆரம்பிக்காமல் பேச மாட்டார். அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மீது மிகப்பெரிய அன்பை வைத்துள்ளார் ரஜினிகாந்த். தன்னுடைய ரசிகர்கள் கொ*ரோனா நோ*யால் பா*திக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமல் இருந்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் ரொம்ப நாட்டம் உள்ளது. ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இமயமலைக்கு சென்று சில நாட்கள் தியானம் செய்துவருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். அப்போது தான் அவருக்கு மன அமைதி கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். அதேபோல இமயமலைக்கு சென்றுவிட்டு வந்து படத்தில் நடித்தால் படம் வெற்றி பெரும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது. தற்போது கொ*ரோனா பரவல் காரணமாக அவரால் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. இது என்னமோ தடங்கல் மாதிரி இருக்கே என்று ரஜினிக்கு மனதில் வருத்தமாம். எல்லாம் கடவுள் விட்ட படி நடக்கும் என்று நினைத்துக்கொண்டு தற்போது பெங்களூரில் இருக்கிறார். கூடிய விரைவில் நாட்டில் கொ*ரோனா பரவல் குறைந்த பின்னர் இமயமலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

Share This Story

Written by

Karthick View All Posts