சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதி என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை ரஜினிகாந்த் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் சென்றுள்ளார். அப்போது கோவிலை சுற்றி இருந்த கிரிவலப்பாதை ரொம்ப மோசமாக இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு சரியான மின்சார வசதி, குடிநீர் வசதிகள் கிடைக்கவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் ரஜினிகாந்த் கிரிவல பாதையில் இருந்த ஒரு வீட்டில் தாகத்திற்காக தண்ணீர் வாங்கி பருகியுள்ளார். பின்னர் திருவண்ணாமலை கோவிலை சுற்றியுள்ள கிரிவல பாதைக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற உதவிகளை செய்துகொடுள்ளார் ரஜினிகாந்த்.
அதுமட்டுமல்லாமல் இந்த அண்ணாமலையாரின் புகழ் அகிலமெங்கும் பரவ வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். இதன் மூலம் அந்த கோவில் அதிக பிரசித்தி பெற்றதாக கோவில் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.