தமிழ் சினிமாவில் எவ்வளவு தரமான படங்கள் வந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு என்று இருக்கும் மவுசே வேறு தான். தங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளங்களை வைத்துக் கொண்டு இந்த முன்னணி நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் குவிக்கிறார்கள். இனி அனைத்து முன்னணி நடிகர்களின் சம்பளங்களிலும் துண்டு விழுந்துவிடும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொ ரோனா வேகமாக பரவி வருவதால் அனைத்து படப்பிடிப்புகளும் ர த்து செய்யப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் தளபதி 65, அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த என அனைத்து படங்களின் படப்பிடிப்பும் ர த்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலைமை மிகவும் மோ சமாக சென்றுகொண்டிருப்பதால் குறித்த தேதிக்குள் படங்களை எடுக்க முடிவதில்லை. எனவே இனி படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளத்தை குறைத்தால் தான் படத்தில் ஓரளவிற்காவது லாபம் பார்க்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் யோசிக்க தொடங்கிவிட்டார்கள். தற்போது விஜய், ரஜினி போன்றோர் 100 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள் என்ற பேச்சும் சினிமா வட்டாரங்களில் அடிபடுகிறது.