தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. இந்த நேரத்தில் விஜய் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னராக வளம் வர ஆரம்பித்துவிட்டார். ஆரம்ப காலத்தில் விஜய் ரஜினியை பாராட்டி துதி பாடி பேசுவார்.
ஆனால் எப்போ அவர் பாக்ஸ் ஆபீஸில் வசூல் மன்னராக அவதாரம் எடுத்தாரா அப்போவே ரஜினியின் துதி பாடுவதை குறைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் நான் தான் இனி சூப்பர் ஸ்டார் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். அவரை சுற்றி உள்ளவர்களும், அவருடைய படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களும் விஜய் தான் இனி சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். விஜய் இருக்கும் மேடையிலேயே ஓப்பனாக பேசுகிறார்கள்.
இதனால் ரஜினி கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டாராம். அந்த பையன் அந்த மேடையில தான் இருக்காரு, அவர் நெனச்சுருந்தா இந்த பிரச்சனைக்கு அப்போவே முடிவு கட்டி இருக்கலாம். ஓப்பனா பேசி இருக்கலாம். அதெல்லாம் விட்டுவிட்டு இப்படி எல்லோரையும் பேச வச்சு வேடிக்கை பாக்குறாரு. இதெல்லாம் நல்லா இல்ல. என்கிட்டே கேட்டா நானே அந்த பட்டத்தை குடுக்க போறேன். ஏன் இப்படி எல்லோரையும் தூண்டி விட்டு அந்த பையன் வேடிக்கை பாக்குறாரு.
இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல. அவங்களுக்கு பதிலடி நம்ம குடுக்கணும். எப்படி பாக்ஸ் ஆபீஸ் கிங்ன்னு விஜய்யை சொல்றாங்களோ அந்த இடத்தை மீண்டும் நம்ம பிடிக்கணும். நம்ம பேசக்கூடாது, நம்ம படம்தான் பேசணும். அடுத்து வெளியாகும் படத்தில் நான் மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங்ன்னு நிரூபிப்பேன் என தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் ரஜினிகாந்த் பேசியதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.