உணவை பிடிக்காதவர் என்று ஒருவரையும் கூற முடியாது. உயிர்வாழ அனைவரும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டே ஆக வேண்டும். ஒரு சிலர் பசிக்காகவும், ஒரு சிலர் ருசிக்காகவும் சாப்பிடுவாங்க. அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. உணவின் மீது காதல் கொண்ட ஒருவராக நீங்க இருந்தால் உங்களுக்கு ஒரு சூப்பர் ஜாக்பாட் அடிக்க போகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த உணவு நிறுவனம் ஒன்று தனது வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவை வழங்க வேண்டும் என்று நினைப்பதால் ருசியை கண்டறியும் ஒரு நிபுணரை தேடிக்கொண்டுள்ளது. இந்த வேலைக்காக 50,000 ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபரின் பிரதான வேலையே உருளைக்கிழங்கை சுவைத்து பார்ப்பது தான். வறுத்த உருளைக்கிழங்கை ருசி பார்த்து அது சரியாக வறுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் அந்த உணவு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு தரமான வறுத்த உருளைக்கிழங்குகள் கிடைக்கும்.
The Botanist என்ற உணவகம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உங்களுக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும் என்றால் விரைவாக இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலைக்கு முயற்சி செய்யுங்க. உருளைக்கிழங்கை சாப்பிடுவதற்கு மாதம் 50,000 சம்பளம் என்றால் கசக்கவா போகிறது. நீங்க உணவு பிரியராக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்க. இதுபோன்ற வாய்ப்பு எல்லா நேரத்துலயும் கிடைக்காதுங்க.