நடப்பு T20 உலகக்கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து இந்தியா ஜிம்பாப்வே அணியுடன் விளையாடும் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
ஏற்கனவே இந்த ஜிம்பாப்வே அணி தான் பாகிஸ்தான் அணியை திரில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் அரை இறுதி கனவை சுக்கு நூறாக்கியது. நடைபெறப்போகும் இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி கனவு நனவாகிவிடும்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த சிஹார் ஷின்வாரி என்னும் நடிகை ஜிம்பாப்வே அணி மட்டும் இந்தியாவை போட்டியில் வென்றுவிட்டால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று ஓபன் சேலஞ்ச் செய்துள்ளார். இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வேகமாக பரப்பி வருகின்றனர்.