சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. இது ரஜினிகாந்தின் சொந்த தயாரிப்பில் உருவான படம். இந்த படம் உருவாகும் முன்னர் ரஜினியின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க யாரை போடலாம் என்ற டிஸ்கஷன் நடந்துள்ளது. அப்போ ரஜினி இந்த படத்தில் சிவாஜி சார் நடிச்சா நல்லா இருக்கும் என்று சொல்லியுள்ளார்.
பின்னர் படத்தின் டைரக்டர் K.S.ரவிக்குமாரும், மேனேஜர் தேனப்பனும் சிவாஜியை பார்த்து கதை சொல்லியுள்ளனர். சிவாஜி சாருக்கும் கதை பிடித்துப் போகவே நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் சம்பளம் தொடர்பாக சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரிடம் பேசியுள்ளனர். அப்போது ராம்குமார் சிவாஜிக்காக கேட்ட சம்பளம் ரொம்பவே அதிகமாக இருந்தது.
பின்னர் படத்தின் மேனேஜர் தேனப்பன் ரஜினியிடம் சம்பளம் ரொம்ப அதிகம் கேக்கறாங்க, என்ன பண்ணலாம் என்று கேட்டுள்ளார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, அவங்க கேக்கற பணத்தை கொடுத்துருங்க என்று ரஜினி சொல்லிவிட்டாராம். அதேபோல படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பின்னர் நடிகர் ரஜினி தேனப்பனை அழைத்து பேசினாராம். நீங்க பேசுனதை விட கம்மி செலவுல படத்தை முடிச்சு குடுத்துட்டீங்க, மீதி உள்ள பணத்தை படத்தில் வேலை பார்த்த எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்துருங்க என்று ரஜினிகாந்த் சொன்னாராம்.
உடனே தேனப்பன் எல்லாருக்கும் மீதமுள்ள பணத்தை பிரித்துக் கொடுத்தாராம். அந்த வகையில் அவர்கள் பெற்றது டபுள் மடங்கு சம்பளமாம். அதுவும் படத்தில் எடிட்டர் வேலை செய்த நபருக்கு அவரின் வேலை பிடித்துப் போய் அவரின் ஏ ழ்மை நிலையை அறிந்து ரஜினிகாந்த் புது வீடு கட்ட ஆகும் பணத்தையும் கொடுத்தாராம்.