ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த படத்தின் கதை எல்லோரும் விரும்பும்படி இருக்க வேண்டும். திரைக்கதை தெளிவாக இருக்க வேண்டும். இப்போ இருக்க மக்கள் எல்லாம் ஒரு படத்துக்கு 200 ரூபாய் செலவு செய்து பாக்குறோம்ன்னா அந்த படம் அந்த 200 ரூபாய்க்கு ஒர்த்தா இருக்கணும் என்று நினைக்கிறார்கள்.
தாங்கள் விரும்பும் விஷயம் அந்த படத்தில் இல்லை என்றால் அந்த படத்தில் எப்பேர்ப்பட்ட முன்னணி கதாநாயகன் நடித்திருந்தாலும் அந்த படத்தை ரசிகர்கள் புறக்கணித்து விடுவார்கள். இதுதான் உண்மையான நிலைமை. ஆனால் சில நடிகர்களின் படங்கள் சுமாராக இருந்தாலும் அந்த நடிகரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குக்கு படை எடுக்கிறார்கள்.
பிரபாஸ் போன்ற நடிகர்களின் படங்கள் கூட படத்தின் கதை சரி இல்லை என்றால் அட்டு பிளாப் ஆவதை கண்கூடாக பார்த்தோம். ஆனால் விஜய், அஜித், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த எந்த படத்தின் கதையும் மக்களை பெரிதாக கவரவில்லை. இருந்தும் ரசிகர்கள் தங்கள் முன்னணி நடிகரை திரையில் பார்ப்பதற்காகவே தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்கிறார்கள். ஒரு சுமாரான கதை அம்சம் கொண்ட படத்தை சூப்பர் ஹிட்டாக மாற்றும் வல்லமை இந்த மூன்று பேருக்கு மட்டும் தான் இருக்கு போல.