தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இவருடைய படங்கள் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. தமிழ் சினிமாவில் இனி நயன்தாராவை மிஞ்ச எந்த நடிகையாலும் முடியாது என்னும் நிலையை எட்டிவிட்டார்.
இவர் கடந்த சில வருடங்களாகவே சோலோ ஹீரோயின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துவருகிறார். இவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களும் ரசிகர்களை திருப்தி படுத்துவதால் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துவிட்டார். ஈரம் படத்தை இயக்கியவர் அறிவழகன். இவருடைய இயக்கத்தில் கு ற்றம் 23, ஆறாது சி னம், வல்லினம் போன்ற படங்கள் வெளிவந்தன.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவை சந்தித்து சோலோ ஹீரோயின் கதை ஒன்றை கூறியுள்ளார். அந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் சில பல காரணங்களால் நயன்தாரா அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது மீண்டும் அறிவழகனின் நியாபகம் வந்து அவருக்கு நயன்தாரா போன் செய்துள்ளார். ஏற்கனவே சொன்ன கதையில் நிறைய மாற்றங்கள் செய்து ஒரு பக்காவான கதையை நயன்தாராவிடம் வீடியோ காலில் சொல்லியுள்ளார்.
முழு கதையையும் கேட்டு நயன்தாரா மி ரண்டு விட்டாராம். நம்ம கண்டிப்பா இந்த கதையை பண்ணுவோம். ஊரடங்கு முடிந்து நிலைமை சரியானவுடன் கண்டிப்பாக இந்த கதையை பண்ணலாம். வெயிட் பண்ணுங்க. கதை சூப்பர் என்று அறிவழகனை புகழ்ந்து தள்ளிவிட்டாராம். இப்போ தெரிந்த அறிவழகனின் மகிமை அவர் உங்ககிட்ட கதை சொன்னப்பவே தெரிந்திருந்தால் இந்நேரம் சூப்பர், டூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கலாம், நல்ல வேலை கதை வேற ஒரு நடிகையின் கைக்கு மாறாதது நயன்தாராவின் அதிஷ்டம் தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.