notification 20
Daily News
வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் செஞ்ச கூத்து! கடைசியில் கல்யாணமே நடக்கலையாம்! எல்லாம் போதை செய்யுற வேலை!

undefined

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், மேலக்கோட்டையூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. சனிக்கிழமை இரவு இந்த மணமக்களுக்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

tamilnadu-sengalpattu-marriage-stop-reason

அப்போது மணமகன் போதையில் இருந்ததாகவும், தள்ளாடி மணமகள் வீட்டில் உள்ள நபர்களிடம் பிரச்சனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் போலீசார் வந்து மணமகனை விசாரித்த போது மணமகன் மது அருந்தவில்லை என்பதும், போதை ஊசி எதுவும் பயன்படுத்தவில்லை என்றும் கண்டுபிடித்தனர். ஒருவேளை கஞ்சா போன்ற போதை பொருளை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் மணமகள் வீட்டில் புகார் அளித்தனர்.

tamilnadu-sengalpattu-marriage-stop-reason

ஒரு கட்டத்தில் மணமகனின் சேட்டை தாங்கமுடியாமல் மணமகனை அடிக்க பெண் வீட்டார் சென்றனர். பின்னர் பாதுகாப்பாக மணமகனை மண்டபத்தில் இருந்து போலீசார் மீட்டனர். இந்த பையன் எனக்கு வேண்டாம், கல்யாணத்துக்கு ஆன செலவு எல்லாத்தையும் திருப்பி கொடுங்க என்று பெண் வீட்டில் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

Share This Story

Written by

Karthick View All Posts