தமிழக மக்கள் அனைவருக்கும் "Makkal ID" என்ற பெயரில் புதிய அடையாள எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் செல்லுபடியாகக்கூடிய ஆதார் இருக்கும்போது இன்னொரு அட்டையையும் தூக்கிக்கிட்டு அலையறது மக்களுக்கு தொந்தரவு. இந்த மக்கள் ID பணிக்காக எத்தனை கோடி செலவாகுமோ?
இப்போது இருக்கும் தேசிய தரவுதள மையத்திடம் இருந்து தமிழ்நாட்டு விவரங்களை பெறுவது பெரிய விஷயமே இல்லை. அரசு டேட்டா சைன்ஸ் வல்லுனர்களை கொண்டு ஒரு மாதத்தில் இந்த தகவல்களை பெற முடியும். பின் அவற்றை இன்னும் மெருகேற்றி வேண்டிய தகவல்களை பெற முடியும். ஆனால் புதுசா ஒரு ஐடி உருவாக்குறேன்னு சொல்றது வேண்டாத வேலை.
இப்போது உள்ள ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஆதார் இணைப்பு கொண்டவை. அரசு நினைத்தால் ஒரே நொடியில் எவ்வளவு குடும்பங்கள் அதில் யார் யார் என்னென்ன திட்டங்கள் மூலம் பயன் பெறுகிறார்கள் என்பதை கண்டு பிடித்து விடலாம். தமிழக மக்கள் தாண்டி யார் எங்கே பலன் பெறுகிறார்கள் என்று கண்டுபிடித்து தடுக்கலாம் அதை விட்டுவிட்டு தனி அடையாள அட்டை என்பது அவசியமற்றது.