பெண்கள் சுயஉதவி குழு என்கிற பெயரில் ஏகப்பட்ட கொடுமைகள் நடக்கிறது. சில இடங்களில் அதிக அளவில் பணம் வாங்கி பின்னர் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்த கொடுமைகளும் நடந்து இருக்கிறது. பாவம் அவர்கள். மனித மிருகங்களுக்கு இடையே வாழ்கிறார்கள். பலர் அவர்களை சுரண்ட முடியுமா என்று காத்து கிடக்கிறார்கள்.
கிராமங்கள் தோறும் இது போன்ற கடன் வலையில் ஏராளமான பெண்கள் சிக்கி இருக்கிறார்கள்.காப்பாற்ற வேண்டிய கணவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமலே குடி போதையில் அழிகிறார்கள். சமீபத்தில் ஒரு குடிகார அப்பன் தன் 13 வயது மகளுக்கு தினமும் குடிக்க காசு தருவான் என்று ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறான். ஆறு மாதம் குடும்பம் நடத்திய பின் இப்போது மருமகன் போக்சோ சட்டத்தில் கம்பி எண்ணுகிறான்.
குடியால் அந்த பெண் வாழ்க்கை தொடங்கும் முன்பே முடிந்து விட்டது. மகளிர் குழுக்களில் சேருவதை முதலில் அவசியமாக உணர்ந்த மக்கள், இன்றோ ஒழுக்கத்தை அளவீடு செய்யும் செயலாக மாற்றி விட்டார்கள் சுதாரித்துக் கொண்ட பெண்கள் கணவர்களின் உதவியுடன் கடனை அடைத்து அந்த சுழலில் இருந்து மீண்டு விடுகிறார்கள். ஒரு சில பெண்கள் மில் அலுவலக அறைகளில் அதிக நேரம் செலவழிக்க நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். பணம் கொடுக்க வர சொல்லி கற்பழித்த கொடுமைகள் எல்லாம் நடந்தது.