வேலைக்கு செல்லாமலே இரண்டு நிறுவனங்களில் இருந்து சம்பளம் வாங்கி ஜாலியா இருந்த ஒரு பலே கில்லாடி இப்போது மாட்டிக்கொண்டார். இத்தாலி நாட்டை சேர்ந்த கணித ஆசிரியர் தான் இந்த சூப்பர் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். அவர் உடம்பு சரியில்லை அது இதுவென பலவிதமான காரணங்களை கூறி கடந்த மூன்று வருடங்களாக ஏமாற்றியதுடன் ஏகப்பட்ட பணத்தையும் வாங்கியுள்ளார்.
கடந்த மூன்று வருடத்தில் 769 நாட்கள் லீவில் இருந்தாலும் மருத்துவச்செலவு, குழந்தை பராமரிப்பு என்று சொல்லி சம்பளம் மட்டுமல்லாது சிறப்பு தொகுப்பாகவும் பணத்தை வாங்கியுள்ளார். இந்த பொய் காரணங்களை நிரூபிக்க இந்த மூன்று ஆண்டுகளில் போலி மருத்துவ சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சூதானமாக செயல்பட்டுள்ளார். என்னதான் கில்லாடியாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் மாட்டிக்கொள்வான் அல்லவா? இவருடைய நிலைமையும் அப்படித்தான் ஆனது.
கூட வேலை பாக்குறவன் எல்லாம் சும்மா இருப்பானுங்களா? துப்பறிஞ்சு ஒருவழியா உண்மையை கண்டுபிடிச்சிட்டாங்க. குட்டு வெளிச்சத்துக்கு வந்ததும் அவருடைய லீலைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. பொய் சொல்லி லீவு வாங்கி அதுக்காக சம்பளமும் பள்ளியில் இருந்து வாங்கியதோடு மட்டுமல்லாமல் வெளியே பல நிறுவனங்களில் வேலை பார்த்து சுமார் 84 லட்சம் சம்பாதித்துள்ளார் அந்த நபர்.
மற்ற நிறுவனங்களில் செய்த வேலைக்கு 84 லட்சமும் மூன்று வருடங்களாக பள்ளியில் இருந்து 11 லட்சமும் வாங்கி ஜாலியா இருந்த இந்த பயபுள்ள இப்போ போலீஸ் கிட்ட சிக்கிட்டான். இவரு செஞ்ச மோசடியை பார்த்து பள்ளி நிர்வாகம் அப்படியே ஆடிப்போயிடுச்சாம்.
எப்படி இந்த ஆளு மூன்று வருடங்களாக தண்ணி காட்டியிருப்பாரு? மூணு வருஷமா கண்டுபிடிக்காம பள்ளி நிர்வாகம் ஏமாந்திருக்குது என்றால் அவுங்க எவ்வளவு வெகுளித்தனமா இருந்திருப்பாங்க? இப்படிப்பட்ட மோசடிகளை பார்க்கும்போது நம்ம நாட்டுல இருக்குறவங்க எல்லாம் கத்துக்குட்டி என்று தான் தோன்றுகிறது.