வளர்ந்த நாடுகளில் குழந்தை பருவத்தில் இருந்தே ஆண், பெண் சகஜமாக பழகுதல், க லவி பற்றிய கல்வி, கடுமையான சட்டங்கள் போன்றவை உள்ளன. நாம் இப்போ வரைக்கும், அதில் பின் தங்கியே உள்ளோம். எந்த ஒரு விஷயத்தை நாம் மறைத்து வைக்க முயல்கிறோமோ, அதை தான் மனம் தேடும். இது மனித இயல்பு. இனி வரும் காலங்களில் பிள்ளைகளுக்கு என்ன தேவையோ, அதனை நல்ல முறையில் கற்பிக்க பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பா லியல் குற்றங்கள் சடுதியாக குறையும்.
பா லியல் உணர்வு சம்பந்தமாக யாருடைய மனதிலும் யாரும் நுழைந்து பார்க்க இயலாது. பா லியல் உணர்வு என்பது யாருக்கு எப்போது மிகும் என்பதை இந்த உலகில் எவரும் கண்டுணர்வது கடினம். பெண் ஆணைக் கவர உடையணிவதும், ஆண் பெண்ணைக் கவரும்படி உடல் கட்டு தெரியும் படி உடையணிவதும் இயற்கையான பாலுணர்வு உந்தலின் வெளிப்பாடுகள். இயற்கையை கட்டுப்படுத்த இயலாது என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். எனவே தான் பா லுணர்வு ரீதியாக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
உடல்ரீதியாக தான் இ னப்பெருக்கத்திற்கு தயார் என காட்டுவது முன்னழகும் பின்னழகும் தான். இவை இயற்கை விதிகள். அதனால்தான் பெண் குழந்தையாக இருக்கும் போதே பெண்ணிடம் உடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள், உடல் பற்றிய புனிதங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவை ஒரு கட்டத்தில் அடக்கு முறையாக மாறி, பெண்கள் கேள்விக்கிடமின்றிகட்டுப்பட வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் பெண்கள் பிகினி உடையில் கடற்கரையிலோ, குட்டை ஆடையுடன் அலுவலகத்திலோ இருந்தாலும் எவரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
இந்த நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவு. சாதரணமாக சைட் அடித்தால் கூட ஸ்டாக்கிங் குற்றம் என விசாரணையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அதுவே, கட்டுப்பாடோடு மாராப்பை மறைக்கும் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் மிக அதிகம். நம்முடைய கலாச்சாரத்திற்குள் நிறைய பாதுகாப்புணர்வு பொதிந்துள்ளது. இயற்கையான பா லுணர்வு உந்தப்படும் காலத்தில், அளவு மீறி நெருங்கிப் பழகுவது சரியற்றது என்பதற்கு, தற்கால நிகழ்வுகளிலிருந்து தினமும் நிறைய உதாரணங்களை நீங்கள் பார்க்க முடியும். பெண்ணை அடைய நினைக்கும் ஒரு பொருளாக நினைக்காமல், சாதாரணமாக எடுத்துக்கொண்டால், மாது பழக்கத்தின் உந்துதலால் வரும் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.