சினிமா நாடகத்தில் இருந்து படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்தது. நாடகம் ஒரு காலத்தில் உயர்ந்த தொழிலாக, ஒரு கலையாக இருந்தது. பண்ணையார்கள் காலத்தில் அட்ஜெஸ்ட்மண்ட் தலை தூக்க ஆரம்பித்தது. அது அப்படியே தொடர்கதை ஆகிப் போனது. உயர்ந்த நிலையில் இருந்த தேவரடியார்கள், இழிவான தேவதாசிகள் ஆக்கப்பட்டனர்.
நாடகத்தில் நடிக்கும் பெண்களை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து விட்ட பின்னரே நடிக்க விட்டனர். நாடகமாடும் பெண்கள் சில நாட்கள் முன்பே நாடகம் நடக்கும் கிராமத்திற்கு வந்து விட வேண்டும் . உள்ளூர் பண்ணையார் வீடுகளில் அவர்கள் தங்குவார்கள். முதலில் பண்ணையாருக்கு நாடக நடிகைகள் விருந்தாக்கப்படுவார்கள். நாடகம் முடிந்த பின்னர் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் நாடக கோஷ்டிகளை தங்கள் வீட்டில் தங்கி விருந்துண்ண வற்புறுத்துவார்கள்.
ஆண் நடிகர்களுக்கு கறிசோறு விருந்து போடப்படும் . பெண்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கப்படுவார்கள். முரண்டு பிடித்தால் ஊரை விட்டு வெளியேற முடியாது. பிழைக்கவும் முடியாது . இப்போது நாடகம் அப்படியே சினிமாவாக மாறியது. பண்ணையாருக்கு பதில் பைனான்ஸியர் அந்த வேலையை பார்க்கின்றனர். சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கேட்பதை கொடுத்தால், அடுத்த நாளே பட வாய்ப்பு கிடைக்கிறது.