நல்ல ஆண்களுக்கு மத்தியில் ஆண்களுக்கு மத்தியில் சில ஆண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. ஆண்கள் எப்படி இருந்தாலும் பெண்கள் தங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் அதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் தவிர்க்காதீர்கள் அது என்னவோ தெரியவில்லை உள்ளுணர்வு அனைவரையும் மிகச் சரியாக கணிக்கிறது. மனிதர்கள் என்ன தான் நாகரீகம் அடைந்தாலும் உள்ளுக்குள் ஆதி மிருகம் இருக்கத்தான் செய்கிறது.
பெண்கள் இயற்கையாக முன்னெச்சரிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களின் பலவீனம் பாசம் என்ற ஒன்றை வைத்து மோசம் செய்கிறார்கள். பெண்களின் மீது மிகுந்த மரியாதை இருப்பது போலவும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலவும் நடிப்பார்கள். கொஞ்சம் பழகினதும் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. ஓரு ஆணின் உண்மையான முகத்தை இரவில் தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கு சிலமனிதர்கள் கரிசனம் காட்டினாலே ஏன் எதற்கு எனக்கு புரிந்துவிடும். காதல் என்ற பெயரில் தான் முக்கால்வாசி எல்லாமே நடக்குது.