சேலம் மத்திய சட்டக் கல்லூரி மாணவர் சஞ்சய். கல்லூரி அருகே அறை வாடகைக்கு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஹரிணி என்ற பெண்ணும் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கரூரில் பள்ளியில் படிக்கும் போது இருந்தே மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சட்டக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் காதலைத் தொடர்ந்தனர்.
இரவு 1 மணியளவில் சஞ்சய் தனது காதலி தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். மொட்டை மாடியில் ஹரிணியுடன் தனியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மகள் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்த தாய் சுகந்தி அவரைத் தேடி வந்தபோது, இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார். அவரிடம் இருந்து தப்ப சஞ்சய் மாடியில் இருந்து கீழே குதித்தான். இதில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தான்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து சஞ்சயின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். சஞ்சயின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.காதலியின் அம்மாவுக்கு பயந்து மொட்டை மாடியில் இருந்து குதித்த காதலன் குறித்த செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.