notification 20
Misc
இந்த செய்வினை, மந்திரிச்சு வைப்பது இதெல்லாம் உண்மையா?

நண்பர் ஒருவரின் தந்தைக்கு நீண்ட நாட்களாக ஒரு கை, ஒரு கால் வராமல் இருந்தது. நல்லா இருந்த மனுஷன் திடீரென ஒரு கை, ஒரு கால் வெளங்காம போயிட்டார். அவங்க போகாத ஹாஸ்பிடல் இல்ல, பாக்காத டாக்டர் இல்ல, இந்த மனுஷனை குணப்படுத்தவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கடந்த சில வருடங்களாகவே அவங்க வீட்டில் பாட்டி செத்து போய்ட்டாங்க, அவங்க வீட்டில் வளர்த்த கால்நடைகளுக்கு தொடர் தொல்லைகள் இருந்து வந்தன.

நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி முழித்து வந்தார். அப்போது அவங்க சொந்தக்காரங்க ஒருத்தர் வீட்டிற்கு வந்திருந்தார். இவங்க வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாத்தையும் கேட்டுவிட்டு எனக்கு தெரிஞ்ச செய்வினை கோளாறுகளை சரி பண்ணுற ஒரு ஆள் இருக்காங்க, அவங்கள இங்க வரவச்சு என்ன பிரச்சனை இருக்குன்னு கேப்போம் என்று சொன்னார். அவர் சொன்ன விஷயத்தில் யாருக்கும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒரு முறை இதையும் முயற்சி செய்து பாக்கலாம் என்று அந்த செய்வினை பிரச்சனையை சரி செய்யும் நபரை வரவழைத்தார்கள்.

அவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடனே இந்த வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கு என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். கொஞ்ச நேரம் சில மந்திரங்கள் சொல்லிவிட்டு சில பூஜைகளை செய்த பின்னர் இந்த வீட்டின் இடது பக்கத்தில் ஒரு மரம் இருக்கும். அந்த மரத்துக்கு பக்கத்துல நான் சொல்ற எடத்துல குழி தோண்டுங்க என்று சொன்னார்.

அவர் சொன்னத்தைப்போலவே அந்த இடத்தில் குழி தோண்டினார்கள். அங்கே ஒரு கருப்பு நிற கயிறு ஒன்று தென்பட்டது. அந்த இடத்தை மேலும் தோண்டும்போது உள்ளே ஒரு தகடு, வீட்டில் இருந்த அனைத்து நபர்களின் முடி அந்த வீட்டில் இருந்த பெண்களின் மா*தவிடாய் ர*த்தப் போக்கு துணி எல்லாம் இருந்தன. பெண்களின் மா*தவிடாய் ர*த்தப்போக்கு துணியை வைத்து செய்வினை செய்தால் அந்த குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை இருந்துகொண்டே இருக்குமாம்.

பின்னர் அந்த எல்லா பொருளையும் பூஜை செய்த இடத்தில் வைத்து மந்திரங்கள் சொல்லி எரித்துவிட்டார். அந்த சாம்பலை அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கரைக்க சொன்னார். அவர் சொன்ன படியே நண்பர் குடும்பத்தினர் அந்த சாம்பலை கரைத்துவிட்டனர். இந்த பூஜை செய்து முடித்து ஒரே மாதத்தில் நண்பரின் தந்தை உடல்நலம் சரியாகிவிட்டது. யாராலும் சரி செய்ய முடியாத பிரச்சனை அவங்க வீட்டில் வைத்திருந்த செய்வினையை எடுத்தவுடன் சரியாகிவிட்டது. இந்த மந்திரம், மாந்திரிகம், பேய், பிசாசு, செய்வினை எல்லாமே இப்பவும் நம்ம ஊரில் இருக்கத்தான் செய்கிறது. இதை நம்பும் மக்கள் இன்றளவும் இதை பின்பற்றி தான் வருகிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts