போட்டோகிராபி என்பது ஒரு அழகான மற்றும் தனித்துவமான கலை. நம்முடைய இளமை காலத்தின் பழைய சுகமான நினைவுகளை மீட்டெடுக்க புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பேருதவியாக இருப்பது உண்மை தான். ஆனாலும் அதில் சில தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதை நாம் மறுக்க முடியாது.
நம் இந்திய நாட்டில் திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் நேரத்தில் புகைப்படக் கலைஞர்களை அழைத்து வந்து போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது வழக்கம். இந்தியாவில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான விஷயம் சாப்பாடு தான். ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஸ்பெஷல் வகை உணவு இருக்கும். அந்த ஊருக்கென்று தனி பாரம்பரியம் இருக்கும். வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள பொதுவான பாரம்பரிய முறை.
சுப நிகழ்வுகளில் நாம் அழைத்து வரும் புகைப்பட கலைஞர் சில நேரங்களில் நமக்கே இடைஞ்சல் செய்யும் செயல்களில் கூட ஈடுபடுவார். இயல்பாக இருக்கிறேன் என்ற பெயரில் திருமண ஜோடிகளை அலைக்கழித்து விதவிதமாக புகைப்படங்களை எடுப்பர். ஒரு சிலர் எப்போது பந்தி ஆரம்பிக்கும் உள்ளே நுழையலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்து டைனிங் ஹாலில் நுழைந்துகொண்டு ஒரு இடம் விடாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டே செல்வர்.
உணவு பரிமாறும் இடத்தில் கொஞ்சம் தூரத்தில் இருந்து இதை செய்தால் கூட பரவாயில்லை. நேராக நம் வாய்க்கு அருகே கேமராவை கொண்டு வந்து வைத்துக்கொண்டு சாப்பிடும் நேரத்தில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவார்கள். அப்படி ஒரு தர்மசங்கடமான நிலைமையை ஒரு பெண் சந்தித்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று நீண்ட நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அந்த வீடியோவை பார்த்தோம் என்றால் பளபளக்கும் புடவையுடன், மினுமினுக்கும் நகைகளை அணிந்து கொண்டு முழங்கை வரை வளையல்களுடன் இருக்கும் அழகான இளம் பெண் ஒருவர் மிகவும் பசியுடன் இருந்திருப்பார் போலிருக்கிறது. ஆர்வத்துடன் உணவை கையில் எடுத்து வாயின் அருகே கொண்டு சென்ற சமயத்தில் தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து கொண்டு திரும்பி பார்த்தார். அவருடைய செய்கையை கொஞ்சமும் மிஸ் பண்ணாமல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து மிகவும் வருத்தமடைந்த அந்த அழகான பெண்ணின் முகம் ஒரு நிமிடத்தில் மாறிப்போனது. கையில் இருந்த உணவை தட்டில் போட்டுவிட்டு கைகளுக்கு பதிலாக ஸ்பூனில் எடுத்து சாப்பிட துவங்கினார். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபர் அப்படியே அதை இணையதளத்தில் பதிவேற்றி பரப்பி விட்டுள்ளார். பலரும் அதிகம் பகிர்ந்து வரும் இந்த வீடியோவை அந்தப்பெண்ணும் பார்த்தால் இன்னும் எவ்வளவு சங்கடமாக உணர்வார். எதைப்பற்றியும் யோசிக்காமல் இப்படி செய்யலாமா? அந்தப்பெண்ணை நிம்மதியா சாப்பிட விடாம செ ஞ்சிட்டிங்களே.