தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொட்டதெல்லாம் பொன் என்பதைப்போல இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. கதை தேர்வு செய்வதில் நடிகர் தனுஷ் கில்லாடி. என்னதான் ஒரு மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் அவரிடம் கதை கேட்காமல் படத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார்.
ஆனால் இப்போ ஒரு தரமான சம்பவம் ஒன்றை தனுஷ் செய்துள்ளார். ஒரு இயக்குனரிடம் கதையை கேட்காமலேயே அவருடைய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த இயக்குனர் வேற யாரும் இல்லீங்க, நம்ம சுந்தர்.சி தான். இவர் ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாச்சலம் மற்றும் கமலை வைத்து அன்பே சிவம் படத்தை எடுத்தவர்.
இவருடைய படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அரண்மனை மற்றும் கலகலப்பு படங்களில் காமெடி அள்ளித் தெளித்திருப்பார். தற்போது இவர் இயக்கத்தில் அரண்மனை 3 படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. கண்டிப்பா இவர் படத்தில் கதையும், காமெடியும் பட்டைய கிளப்பும். இவர்கிட்ட எதுக்கு கதை கேட்டுக்கிட்டு, எப்படியும் படம் ஹிட் ஆகும் என்று துணிந்து கதையே கேட்காமல் சுந்தர்.சி படத்தில் நடிக்க தனுஷ் சம்மதித்து விட்டார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கூடிய விரைவில் படம் சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.