Deadvlei என்பது நமீபியாவில் உள்ள நமீப்-நாக்லூஃப்ட் பூங்காவிற்குள் இருக்கும் பிரபலமான உப்புத் தொட்டியின் அருகே அமைந்துள்ள ஒரு வெள்ளை களிமண் பகுதி ஆகும். இதன் பெயர் "இறந்த சதுப்பு நிலம்" என்பதாகும். இணையதளத்தில் இந்த இடத்தை பற்றி பல குறிப்புகள் உள்ளன. அதன் பெயர் பெரும்பாலும் "இறந்த பள்ளத்தாக்கு" போன்ற சொற்களில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
vlei என்பது ஒரு பள்ளத்தாக்கு அல்ல. டெட் விளே உலகின் மிக உயர்ந்த மணல் குன்றுகளால் சூழப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மிக உயர்ந்த குன்றுகள் 300-400 மீட்டர் உயரம் கூட இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை இங்கு மழை பெய்த பிறகு களிமண் உருவானது. அருகில் இருக்கும் ஆற்றில் வெள்ளம் வந்தபோது, தற்காலிக ஆழமற்ற குளங்களை அது உருவாக்கியது. அங்கு இருந்த ஏராளமான தண்ணீர் ஒட்டக முள் மரங்களை வளர அனுமதித்தது.
காலநிலை மாறியபோது, வறட்சி அந்தப் பகுதியைத் தாக்கியது. இதனால் மணல் திட்டுகள் அந்தப்பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இது அந்தப் பகுதியிலிருந்து வரும் ஆற்றைத் தடுத்தது. உயிர்வாழ போதுமான நீர் இல்லாததால் இந்தப்பகுதியில் இருந்த மரங்கள் பலவும் இறந்தன.
சால்சோலா மற்றும் நாராவின் கிளம்புகள் போன்ற சில வகையான தாவரங்கள் மட்டுமே தற்போது இங்கே மீதமுள்ளன. அவை மூடுபனி மற்றும் மிகவும் அரிதான மழையிலிருந்து தப்பித்துள்ளன. 600-700 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்படும் மரங்களின் மீதமுள்ள எலும்புக்கூடுகள், இப்போது கறுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஏனெனில் தீவிர சூரிய வெப்பம் அவற்றை எரித்துவிட்டது. இந்த இடத்தை பார்க்கும் போது நம் மனதில் இயற்கைக்கு கூட இன்னொரு முகம் இருக்கிறது என்ற கருத்து ஆழமாக பதிந்து விடுகிறது.