notification 20
Daily News
பெண்ணுடன் குஜாலாக இருக்கலாம் என்று நினைத்து பல லட்சங்களை தொலைத்த இளைஞர்!

சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடந்து வருகிறது. மக்களும் சில சபல ஆசைகளுக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இழந்துவருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அண்மையில் கோவையில் நடந்துள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான ஒரு கல்லூரி மாணவன் அழகான பெண்களுடன் குஜாலாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

coimbatore-college-student-real-incident

இதற்காக ஆன்லைனில் சென்று அழகான பெண்களுடன் இருக்க என்ன செய்வது என்று தேடியுள்ளார். அப்போது ஒரு நபரின் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. அந்த நபருக்கு போன் பண்ணி எனக்கு அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், ஏற்பாடு பண்ணுங்க என்று கேட்டுள்ளார். அந்த நபர் 20000 ரூபாய் செலவாகும், முதலில் முன்பணம் 2500 ரூபாய் அனுப்புங்க என்று கேட்டுள்ளார்.

coimbatore-college-student-real-incident

சபலத்தில் இருந்த இந்த கல்லூரி மாணவர் முன்பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் அழகான பெண்களின் அரைகுறை ஆடைகளுடன் இருந்த புகைப்படத்தை அனுப்பி உனக்கு எந்த பொண்ணு வேணும், நீயே முடிவு பண்ணி சொல்லு என்று அந்த நபர் சொல்லி இருக்கிறார். இந்த கல்லூரி மாணவன் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை முடிவு செய்து இந்த பொண்ணு தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

coimbatore-college-student-real-incident

இந்த ஹோட்டலுக்கு இந்த தேதிக்கு வாங்க என்று அந்த நபர் சொல்லி ஹோட்டல் செலவு, போலீஸ் செலவு அது இது என்று சொல்லி கிட்டத்தட்ட 8 லட்சம் வரை அந்த பையனிடம் கறந்துள்ளார். அந்த கல்லூரி மாணவனும் சபலத்தில் இருந்ததால் அந்த நபர் கேட்ட எல்லா பணத்தையும் அனுப்பிவிட்டார். எல்லா காசையும் அந்த மாணவனிடம் இருந்து கறந்த பிறகு அந்த போலி ஆசாமி தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். தற்போது அந்த கல்லூரி மாணவன் இந்த மோசடி குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். 

coimbatore-college-student-real-incident
Share This Story

Written by

Karthick View All Posts