சினிமா அல்லது சீரியல் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் மேக்கப் மூலமாக மிகவும் அழகான முகத்தையும் தோற்றத்தையும் பெறுவர். ஒரு சிலருக்கு மட்டுமே மேக்கப் இல்லாமலேயே இயற்கையாகவே அழகான நிறமும் முகப்பொலிவும் இருக்கும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது தொலைக்காட்சி நடிகை சைத்ரா ரெட்டி இயற்கையாகவே நல்ல அழகை கொண்டிருப்பார் என்று தெரிகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோஹினி தொடர் மிகப்பெரிய வெற்றியடைய சைத்ரா ரெட்டியும் முக்கியமான காரணமாக இருக்கிறார். இத்தனைக்கும் அவர் அந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். சீரியலில் அல்லது சினிமாவில் இப்படி ஒரு அழகான வில்லியை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
கன்னடத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி. இந்த அழகு தேவதைக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் பழக்கம் கொண்டவர் சைத்ரா ரெட்டி. சமீபத்தில் அவர் துளி கூட மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மேக்கப் இல்லாமலேயே இவ்வளவு அழகா என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.