notification 20
Daily News
சென்னையின் பிரபல ரவுடியை பந்தாடிய ஆந்திர ரவுடி கும்பல்! குத்துயிரும், கொலைஉயிருமாக சென்னை திரும்பிய ரவுடி!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சதிஷ் வயது 28. இவர் சென்னையில் பிரபல ரவுடியாக வளம் வருகிறார். வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் கும்பலில் முக்கிய நபர் இவர் தான். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு உள்ளது. ராயபுரத்தில் நடந்த கொலை ஒன்றில் முக்கிய குற்றவாளியாக இவரின் பெயர் சேர்க்கப்பட்டு இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

chennai-rowdy-attacked-by-andra-rowdies

இருந்தும் இவரை இதுநாள் வரை போலீசால் பிடிக்க முடியவில்லை. அண்மையில் ஆந்திராவை சேர்ந்த நெல்லூரில் இவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சதிஷ் ஆந்திரா சென்றுள்ளார். அங்க போய் சும்மா இருக்காம அங்க இருக்க ரவுடிகளிடம் தன்னுடைய வீரத்தை காட்டியுள்ளார்.

chennai-rowdy-attacked-by-andra-rowdies

நீ வேணும்னா தமிழ்நாட்டுல பெரிய ரவுடியாக இருக்கலாம், ஆனால் இது ஆந்திரா, எங்கள் கோட்டை என்று சொல்லி அந்த ஆந்திரா ரவுடி கும்பல் இவரை நைய்ய புடைந்துள்ளனர். கை, கால், கழுத்து, மார்பு என எல்லா பகுதியிலும் பிளேட் மற்றும் கத்தியால் கிழித்து சதீஷை குத்துயிரும், கொலை உயிருமாக சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர். பின்னர் சென்னை சென்ட்ரல் வந்த இவரை போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

chennai-rowdy-attacked-by-andra-rowdies
Share This Story

Written by

Karthick View All Posts