சென்னையில் கல்லூரி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் சென்றது. மாணவிகள் போட்டோ வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கப்படும். பிடித்தவர்களை தேர்வு செய்து சொன்னால், இடம், நேரம் தெரிவிக்கப்படும். பணம் செலுத்தி உறுதி செய்த பிறகு, அவங்க சொல்லும் இடத்திற்கு சென்றால், விரும்பியதை செய்யலாம். இந்த செயலுக்கு மூளையாக செயல்பட்ட பொறியியல் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
எழும்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள லாட்ஜில் வைத்து பிடித்தனர். அங்குள்ள மசாஜ் சென்டரில் சிக்கிய கல்லூரி மாணவி ஜெயபிரதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனது காதலன் பிரகாஷ் மூலமாக தான் பாலியல் தொழில் புரோக்கராக மாறியதாக கூறினார். கல்லூரிகளில் படிக்கும் பெண்களிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் தேவைக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பது இவர்களது பிளான். வலையில் விழுந்த பின்னார் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருக்க அழைப்பார்கள்.
அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்துள்ளார். இப்படியே கல்லூரி மாணவி என்ற போர்வையில், வகுப்பு தோழிகள் பலரை பாலியல் தொழிலில் ஈடுபட செய்துள்ளார் ஜெயபிரதா. லட்சக்கணக்கில் காசு எண்ண நினைத்து, இப்போது அவரும் காதலன் புரோக்கர் பிரேம்தாஸ் என்பவரும் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருகின்றனர். கல்லூரி மாணவிகள் நிலை ரொம்ப மோசமா போகுது. பெற்றோர்கள் அசால்ட்டா இருக்கும் வரை அவஸ்தை தான்.