பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக பா.ஜ.க சாரபில் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில பிரிவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையை இதற்காக தேர்ந்தெடுத்து உள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, இந்த மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
ஒவ்வொரு தங்க நாணயமும் 2 கிராம் எடை கொண்டதாக இருக்கும். பிரதமரின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் தங்க நாணயத்தை இலவசம் என எடுத்துக்கொள்ளக்கூடாதும். இதனை வரவேற்பின் அடையாளமாக பார்க்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 10 முதல் 15 கைக்குழந்தைகள் பிரசவம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னையில் 720 கிலோ மீன்களையும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் என்பதால் 720 கிலோ மீன்கள் வழங்கப்படவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் மீன்கள் விநியோகிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கட்சியின் தேசிய பிரிவு தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.