சின்னத்தம்பி சீரியல் மூலம் நம் மனதை கொள்ளையடித்தவர் பவானி ரெட்டி. இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் சீரியலுக்கு வந்த பிறகு தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்தம்பி சீரியலுக்கு முன்பாக ரெட்டை வால் குருவி, பாசமலர், தவணை முறை வாழ்க்கை போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்தம்பி சீரியலின் வெற்றிக்கு பிறகு ராசாத்தி என்ற தொடரில் நாயகியாக நடித்தவர் அந்த சீரியலில் இருந்து பிறகு பாதியிலேயே வெளியேறி விட்டார். இவருடைய நேரமா அல்லது ராசியா என்னவென்று தெரியவில்லை. ஒன்று இவர் நடிக்கும் சீரியல் சீக்கிரமே முடிந்து போய் விடுகிறது. இல்லையெனில் இவர் அதிலிருந்து வெளியேறி விடுகிறார்.
இந்நிலையில் மீண்டும் வாய்ப்புகளுக்காக இப்படி செய்கிறாரா அல்லது பொழுதுபோக்குக்காக செய்கிறாரா என்று தெரியவில்லை. சிறிய குழந்தை போடும் அளவில் இருக்கும் உடையெல்லாம் அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பவானி ரெட்டி.
சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகைகள் கூட போட தயங்கும் டூ பீஸ் போன்ற உடையை சர்வ சாதாரணமாக அணிந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார் பவானி. முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்கும் சீரியல் நடிகைகளுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும். சினிமா நடிகைகள் இயல்பாகவே கவர்ச்சியாக நடிப்பதும் புகைப்படம் வெளியிடுவதும் பெரிய விஷயமில்லை.
ஆரம்பத்தில் சீரியல் நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கவும் மாட்டார்கள். கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வளவு எளிதில் வெளியிட மாட்டார்கள். தற்போது பவானி ரெட்டி போன்ற சீரியல் நடிகைகள் சினிமா கதாநாயகிகளுக்கு இணையாக கவர்ச்சியில் போட்டி போடுவது ஆச்சர்யமளிக்கிறது. பவானியை இந்தக் கோலத்தில் பார்ப்பவர்கள் நிச்சயம் இது நம்ம ராசாத்தியா, சின்னத்தம்பி ஹீரோயினா என்று வாயடைத்துப்போவது உறுதி.