அமெரிக்காவில் 34 வயது நபர் ஆத்திரத்தில் ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை முழுவதுமாக விழுங்கியதால் அவசரமாக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு "மனச்சோர்வு" இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். டாக்டர்கள் அந்த நபருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்தபோது பழம் மற்றும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆணுறை மற்றும் வாழைப்பழம் அந்த நபரின் சிறுகுடலில் அடைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அடைப்பு இருப்பதைப் பார்த்த அவர்கள் உடனடியாக அவரை உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில்,அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்து ஆணுறை மற்றும் வாழைப்பழம் உடலில் இருந்து அகற்றப்பட்டது.
24 மணி நேரமாக அவரால் கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் பகிரப்பட்ட ஸ்கேன்களின் புகைப்படங்கள், வாழைப்பழத்தில் இருந்து சதைப்பற்றுள்ள பொருள் அவரது குடலில் ஆழமாக பதிந்திருப்பதைக் காட்டுகிறது. இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்பதால், புகழ்பெற்ற மருத்துவ இதழில் இது குறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ வரலாற்றில் அதிர்ச்சியான சம்பவம் என கூறப்பட்டுள்ளது.