atlee-receives-high-salary-for-upcoming-movie
ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ராஜா ராணி படத்தை இயக்குவதற்கு முன்னர் இயக்குனர் ஷங்கரிடம் அசிஸ்டண்டாக பணிபுரிந்தார் அட்லீ. பின்னர் நடிகர் விஜய்யுடன் நட்பு ஏற்பட்டு தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்தார் அட்லீ.
atlee-receives-high-salary-for-upcoming-movie
கொ*ரோனா காரணமாக தமிழ் சினிமாவில் கடந்த நான்கு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருக்கிறார் அட்லீ. தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற தென்னிந்திய பிரபலங்கள் ஜவான் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த ஜவான் படத்துக்காக அட்லீ 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில முக்கியமான இடங்களில் படத்தை வெளியிடுக்காதற்கான விநியோகிஸ்தர் உரிமையையும் அட்லீ பெற்றுள்ளார்.
atlee-receives-high-salary-for-upcoming-movie
தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ஒரு படத்திற்கு அட்லீயை இயக்குனராக ஒப்பந்தம் செய்ய உள்ளது. அந்த படத்திற்கு அட்லீ 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அட்லீயின் திறமையை நம்பி அவருக்கு 50 கோடி ரூபாய் கொடுக்க சன் பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வரும் ஷங்கர் கூட 50 கோடி சம்பளம் இதுவரை எந்த படத்திற்காகவும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.