தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சில நடிகர், நடிகைகளை நாம் அடிக்கடி திரைகளில் பார்க்க முடிவதில்லை. அந்த வரிசையில் அசோக் செல்வனும், ப்ரியா பவானி சங்கரும் முக்கியமானவர்கள். அசோக் செல்வன் ஆரம்பம் முதலே கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பார். தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை காட் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
அதேபோல ப்ரியா பவானி சங்கரும் மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்போ இந்த வித்யாசமான கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளது. மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான அடி கப்பியாரே கூட்டமணி படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறார்கள்.
படத்தின் கதைப்படி நாயகி ஆண்களுக்கான விடுதியில் மாட்டிக்கொள்கிறார். ஒரு இரவு தங்கலாம் என்று வந்து அவரால் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பெண்ணை காணாம் என்று பெண்ணின் தந்தை வெளியில் வெ றி கொண்டு தேடிவருகிறார். நாயகி விடுதிக்குள் இருப்பதை யாருக்கும் தெரியாமல் நாயகனும் அவனது நண்பர்களும் ம றைக்கிறார்கள். இது தான் இந்த படத்தின் கதை. படம் முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு தமிழில் ஹாஸ்டல் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் நடிக்கும் அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர் இருவரும் ஆரம்பம் முதலே வித்தியாசமான கதைகளில் நடித்துவருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கண்டிப்பாக படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்றும் சினிமா துறையில் பேசிக்கொள்கிறார்கள்.