சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்து கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகின்றன. படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
அண்ணாத்த படத்துடன் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்துடன் ஈஸ்வரன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரஜினி படத்துடன் வெளியானால் அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மாநாடு படம் பார்க்க வருவார்கள்.
இதனால் ரொம்ப சுலபமாக கல்லா கட்டிவிடலாம் என்பது ஒரு வழி. அதேபோல சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் படம் திரையில் வருவதால் கண்டிப்பாக ஆளும் திமுக அரசு எப்படியும் 100 சதவீதம் பார்வையாளர்களை திரையரங்குகளுக்குள் சென்று படம் பார்க்க அனுமதித்துவிடும். அந்த நேரத்தில் மாநாடு படத்தையும் வெளியிட்டால் போட்ட காசை சுலபமாக எடுத்துவிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. எது எப்படியோ படம் நல்லா இருந்தாத் தான் யாராக இருந்தாலும் தியேட்டர் பக்கம் வருவாங்க, ஈஸ்வரன் மாதிரி இருந்தா தலையில் துண்டு விழுவது கன்பார்ம்.