விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களை கொடுமைப்படுத்தி, சொல்ல முடியாத சித்திரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது. நிர்வாகிகள் எல்லாம் அரெஸ்ட் ஆயிட்டாங்க. இவங்களை பின்னால் இருந்து இயக்குவது தான் யாரென்று தெரியவில்லை. பெரிய சப்போர்ட் இல்லாவிட்டால் இப்படி எல்லாம் செய்ய முடியாது. கிட்டத்தட்ட 32 ஆயிரம் மாத்திரைகள் காப்பகத்தில் இருந்துள்ளது. எல்லாமே மனநல மருந்து என்ற பெயரில் விற்பனையாகும் போதை தரும் மருந்துகளாகும். அங்கு விசாரணை நடத்தி அதிகாரி ஒருவர் கொடுத்த பேட்டியை கேட்டாலே குலை நடுங்குது.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் 10 சதவீதம் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. இவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என விசாரணையில் தெரிய வருகிறது. 15 பேர் மாயமாகி உள்ளன அவர்கள் எங்கு உள்ளனர்? எங்கே போனார்கள் என சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கிறது. ரோட்டில் திரிபவர்கள் பலரை அழைத்து வந்து போதை மாத்திரை கொடுத்து அவர்கள் இருட்டறையில் வைத்து கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். கை, கால்களை முறித்துள்ளனர். மத மாற்றம் செய்வதால் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் போதை மாத்திரை கொடுத்து போதைக்கு அடிமையாக்கப்பட்டனர். அங்குள்ள பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீட்டுக்கு செல்வதாக கூறினால், உடனே மாத்திரைகளை மாற்றி, அவர்களை மேலும் மனதளவில் பதிக்க செய்தனர். சித்திரவதை செய்து செயற்கையாக பைத்தியம் பிடிக்க வைத்தனர். இவ்வளோ கொடுமைகள் நடந்திருப்பது இப்போதைய விசாரணை மூலம் தெரிய வருகிறது. இன்னும் பல ரகசியங்கள் மறைந்து இருக்கலாம்.