notification 20
Lushgreen
80 வயது ஆனாலும் கூட உ டலை அலட்டிக்கொள்ளாமல், உட்கார்ந்த இடத்திலே பதுசாபவ்யமாக பணம் சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் யாரேனும் உண்டா?

இந்தியாவில் கோடி கோடியாய் பணம் சம்பாதிப்பவர்கள் பலர் இருந்தாலும் கூட, அமிதாப்பச்சன் தன்னுடைய 79 வயதில் இன்றும் பெருமையாக பேசப்படும் அளவிற்கு தன்னிச்சையாக இயங்குகிறார். படங்கள், விளம்பரங்கள் என கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் இந்த வயதிலும் தவறாமல் பயன்படுத்தி கொண்டு, அயராமல் உழைக்கும் அமிதாப்பச்சனின் ஊதியம் மாசத்திற்கு பலகோடிகளாம். 

மும்பையில் பலமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், பங்களாக்கள் என தன்னுடைய உழைப்பை முதலீடாக போட்டுள்ளார். இன்றும் உழைக்கும் இவருடைய மாதாந்திர உழைப்பை விட இவருடைய முதலீடு கொடுக்கும் வருமானம் பலகோடிகளாம்.  

மும்பையில் பெரும் பணக்காரர்கள் மட்டும் இருக்கும் இடம் தான்  ஜூஹூ. இந்த இடத்தில் எந்த வீடும் வாடகைக்கு கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ஆனால் அமிதாப்பச்சன் இந்த பகுதியில் உள்ள தன்னுடைய இடத்தின் தரை தளத்தை ஸ்டேட் பேங்கிற்கு வாடகைக்கு விட்டுள்ளார். கவர்மண்ட்டிற்கே இடம் இல்லாமல் தவிக்கும் போது, இடம் கொடுத்து உதவியவர் அமிதாப் அவர்கள் தான். 

இந்த வங்கியின் மாதாந்திர வாடகை எவ்வளவு தெரியுமா? 18.9 லட்சமாம். ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் 25% வாடகை உயர்ந்து கொண்டே போகுமாம். இது இல்லாமல் பண்ணை வீடுகள், வெளிமாநில சொத்துக்கள் அது தனி கணக்கு! ஒரு குடும்பம் வாழ கோடி ரூபாய் போதாதா? தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவார்கள் போல?

Share This Story

Written by

AP View All Posts