தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தல அஜித். இவருடைய படங்களுக்கு முதல் சில வாரங்களுக்கு டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் இவர் படங்களை ரசிப்பார்கள். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் எப்போதும் தன் வாழ்க்கையில் தான் பட்ட க*ஷ்டங்களை தன் படத்தின் மூலமாகவும்,அதில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாகவும் வெளிப்படுத்திவிடுவார். இப்போ தான் எல்லாரும் தல, தளபதி என்று சொல்லிக்கிட்டு திரியுறாருங்க. ஒரு காலத்தில் இவங்க ரெண்டு பேரும் நல்ல படங்களை கொடுக்க ரொம்ப க*ஷ்டப்பட்டார்கள்.
அஜித் சினிமாவிற்கு வந்த புதிதில் சில படங்கள் வெற்றி பெற்றன. ஆசை, காதல் கோட்டை போன்ற படங்கள் இவரை காதல் நாயகனாக மக்களின் முன் நிறுத்தின. பின்னர் இவருடைய நடிப்பில் வெளியான நான்கு படங்கள் சுத்தமாக ஓடவில்லை. அதில் காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் வெளியான தொடரும் படமும் ஒன்று. இனிமேல் அஜித் அவ்வளவு தான், அவரால் சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.
அப்போது தல அஜித் இயக்குனர் சுந்தர்.சியிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். சார், நான் கடைசியா நடிச்ச நாலு படமும் ஓடல. நீங்கதான் எனக்காக ஒரு நல்ல கதை ரெடி பண்ணணும் என்று கேட்டுள்ளார். உடனே சுந்தர்.சி ஷாருகான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழில் உன்னைத் தேடி என்ற படத்தை அஜித்தை வைத்து எடுத்தார். படமும் அனைவரும் எதிர்பார்த்ததை போலவே சூப்பர் ஹிட்டானது. S.J.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் நடித்து அஜித் பெரும் புகழை அடைந்தார். அஜித் வாய்ப்பு கேட்டது பற்றி அண்மையில் சுந்தர்.சி. அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.