நடிகர் அஜித் தற்போது தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடிகர் அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரை பொது வெளியில் பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.
ஆனால் நடிகர் அஜித் எப்போதும் அமைதியை விரும்புபவர். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்தவர். அண்மையில் சென்னையில் துணிவு படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பியுள்ளார் அஜித். அப்போது அவரை நிறைய ரசிகர்கள் பின்தொடர்ந்து அவர் காருக்கு பின்புறமாக சென்றுள்ளனர்.
மாற்று திறனாளி ரசிகர் ஒருவரும் அஜித்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அஜித்தை பின்தொடர்ந்த ரசிகர்கள் அனைவரையும் அஜித்தின் வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அஜித்குமார். நீங்க எல்லாம் என்ன பண்றீங்க என்று அந்த ரசிகர்களிடம் கேட்டுள்ளார் அஜித். நாங்க எல்லோரும் படிக்கிறோம் என்று அந்த ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
நீங்க என்னோட காரை பின்தொடர்ந்து வந்தால் உங்களுக்கு ஆபத்து, எங்கயாச்சும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் நம்ம எல்லாருக்கும் கஷ்டம், என்னுடைய கார் ஓட்டுனரும் சரியாக கார் ஓட்டமுடியாமல் கஷ்டப்படுகிறார். இனிமேல் இந்த மாதிரி காரை பின்தொடர்ந்து வராதீர்கள், இந்த விஷயத்தை நான் சொன்னதாக எல்லா ரசிகர்களிடம் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார் நடிகர் அஜித்.