notification 20
Daily News
நம்பிக்கையான ஆளுங்கன்னு வீட்டுக்குள்ள விட்டா இப்படியா பண்ணுவாங்க! சோகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

aishwarya-rajinikanth-plot-jewel-theft-incident

நடிகர் தனுஷை 18 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த தம்பதிக்கு இரண்டு அழகான ஆண் வாரிசு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுசுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது தன்னுடைய இரு மகன்களுடன் தனியாக பிளாட்டில் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா.

aishwarya-rajinikanth-plot-jewel-theft-incident

தற்போது லால் சலாம் என்னும் படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. திருமணத்திற்கு பிறகு தான் சேர்த்து வைத்திருந்த 60 பவுன் நகை மற்றும் வைர ஆபரணங்கள் அனைத்தையும் தன்னுடைய வீட்டில் உள்ள ஒரு லாக்கரில் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. அந்த லாக்கரின் சாவியையும் வீட்டில் உள்ள ஒரு பீரோவில் வைத்துள்ளார் ஐஸ்வர்யா. அண்மையில் அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது அந்த லாக்கரில் இருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளது.

aishwarya-rajinikanth-plot-jewel-theft-incident

பின்னர் காவல் நிலையத்துக்கு சென்று ஆபரணங்கள் தொலைந்தது பற்றி புகார் அளித்துள்ளார் ஐஸ்வர்யா. எங்க வீட்டில் வேலை பார்க்கும் பணியாட்கள் எல்லோருக்கும் லாக்கர் சாவி எந்த இடத்தில் இருக்கும்ன்னு தெரியும். எனக்கு மூணு பேர் மேல சந்தேகமா இருக்கு, அவங்களை விசாரணை பண்ணுங்க என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார் ஐஸ்வர்யா.

Share This Story

Written by

Karthick View All Posts