பிஸ்தா ஹவுஸ் என்ற நிறுவனம் பழைய ஏர் இந்தியா விமானம் ஒன்றை வாங்கி அதை ஹோட்டலாக மாற்றியமைக்க முடிவு செய்தது. கொச்சியில் இருந்து விமானத்தை விலைக்கு வாங்கி அதை லாரி மூலம் ஹைதராபாத் கொண்டு போக முடிவு செய்தது பிஸ்தா ஹவுஸ்.
மிகப்பெரிய விமானத்தை லாரி வழியாக சாலையில் கொண்டு செல்வது மிகவும் சவாலான காரியம் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது. கொச்சியில் இருந்து புறப்பட்ட அந்த லாரி ஆந்திராவில் உள்ள பாபட்லா மாவட்டத்தின் வழியே பயணித்து கொண்டிருந்த நேரத்தில் சாலையில் உள்ள மேம்பாலம் ஒன்றை தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது.
பாலத்துக்கு அடியில் லாரியை கொண்டு சென்ற போது விமானம் பாலத்தை ஒட்டியவாறே வந்ததால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் பாலத்துக்கு அடியிலேயே சிக்கிக்கொண்டது. ராட்சத விமானம் பாலத்துக்கு அடியில் சிக்கியதால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூட்டம் கூடி அது சம்மந்தப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது.
This happened in India Again ! Retired Air India Airbus A320-231 aircraft (VT-ESE / MSN). 431 ) fuselage got stuck underneath a bridge in Andhra Pradesh while getting transported from Kochi to Hyderabad.
— FL360aero (@fl360aero) November 14, 2022
📹 and Report : Ajay Reddy pic.twitter.com/uoh9svdfY8
விமானம் பாலத்துக்கு அடியில் மாட்டிக்கொண்ட தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் விமானத்தை பத்திரமாக நகர்த்த முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் விமானம் அங்கிருந்து நகர்த்தப்பட்டு வேறு மார்க்கமாக ஹைதராபாத் வந்து சேரும் என பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.