notification 20
Misc
திருமணமான 6 வருடங்களில் தாம்பத்தியம் ஸ்விட்ச் ஆப்! எதற்கப்பா அவசரப்படணும்? விவாகரத்தான பெண்ணுக்கு ஒளியேற்றி, பியூஸ் போன நண்பரின் சோகம்!

பெரியவங்க சொன்னா அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். மாற்றிக் காட்டுறேன் பேர்வழின்னு சொல்லி முந்திரிக்கொட்டை தனமாக ஏதாவது செய்தால், கடைசியில் அவஸ்தைப்படுவது நாமாகத்தான் இருக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் வயது வித்தியாசம் பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கு பின்னால், பல காரணங்கள் இருக்கு. பொதுவா ஆண்களை விட, பெண்களின் வயது குறைவாக இருக்க வேண்டுமென்று சொல்வதற்கும், தாம்பத்திய வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இளமை ஊஞ்சலாடும் போது, வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வது இனிக்கலாம்.

காலம் போகப்போக ஏன்டா திருமணம் செய்தோம் என்கிற மாதிரியாகிவிடும். உதாரணத்துக்கு என்னுடைய நண்பரின் வாழ்க்கை கதையையே எடுத்துக்கோங்க. அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அந்தப் பெண் விவாகரத்தாகிவிட்டார். விவாகரத்து வழக்கு தொடங்கும் போது, அப்பெண்ணின் மகள் சிறு குழந்தை. அந்த வழக்கு முடிய சில வருடங்களாகிவிட்டது. இதற்கிடையில் நண்பருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்போடு பழகிய பின்னர் திருமணம் செய்யும் நிலை வந்து விட்டது.

விவாகரத்தான பெண்ணை சந்திக்கும் போது நண்பருக்கு திருமணம் ஆகவில்லை. இரு வீட்டாருக்கும் இவர்களது விஷயம் தெரிந்து, கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் கோவிலில் திருமணம் நடந்தது. நண்பருக்கும் அந்த பெண்ணுக்கும் 8 வயது வித்தியாசம். அப்போது அது பெரிதாக தெரியவில்லை. பிரச்சனை அதன் பின்பு தான் ஆரம்பமானது. திருமணமான 6 வருடங்களில் பெண் 50 வயதைத் தொட, உடல்நிலை காரணமாக  இயல்பான கணவன் மனைவி உறவுக்கு பெரும் சிக்கல் உண்டானது. நண்பருக்கு வயது 40 ரேஞ்சில் இருக்கும் போது, பெண்ணுக்கு தாம்பத்திய ஆசை முற்றிலுமாக நீங்கிவிட்டது.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இப்போது வருத்தப்படுகிறார். சாமியாரா மாறிவிட்டது போல உணர்கிறேன். மன உளைச்சலாக உள்ளது என அடிக்கடி கூறுகிறார். கணவன், மனைவி தாம்பத்திய உறவு நன்றாக இருக்கும் போதே, மற்ற காரணங்களால் குடும்பங்களுக்குள் எத்தனையோ பிரச்சனைகள் வந்து போகிறது. இதில் தாம்பத்தியம் என்ற அடிப்படை விஷயமே இல்லை என்றால், ஆணின் பாடு படுதிண்டாட்டம் தான். ஏற்கனவே விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்ததால், மீண்டும் வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல், வேறு வழியும் தெரியாமல் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் மனுஷன்.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts