அன்றைய சினிமாக்களில் கதாநாயகிகளை விட க வர்ச்சி நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். அவர்கள் அப்போது தைரியத்தின் ஒளிவிளக்காக இருந்தார்கள். காரணம் இன்றைய உலகில் க வர்ச்சி, அரைகுறை ஆடை என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் கதாநாயகியாகவே நடிக்க பெண்கள் கூச்சப்பட்ட அந்த காலத்தில் க வர்ச்சியை காட்டி நடித்த அவர்களின் தைரியத்தை கணிக்கிட முடியவில்லை. அதில் பலர் வழிமாறி வாழ்க்கையை தொலைத்திருந்தாலும், சிலர் நன்றாக நடித்து, நல்ல குடும்பத்தையும் அமைத்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அன்றைய க வர்ச்சி நடிகை என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது சில்க் ஸ்மிதா தான். இவரது உ டலை விட கண்களை ரசித்தவர்களே அதிகம். உண்மையில் அன்றைய க வர்ச்சி நடிகைகள் க வர்ச்சியை உ டம்பில் மட்டுமல்ல முகத்திலும் காட்டலாம் என்பதை நிரூபித்தார்கள். கண்களால் மயக்குவது, உதடுகளை சுழற்றுவது, நாக்கை மடித்து இழுப்பது என முக பாவனைகளிலேயே அனைவரையும் சுண்டி இழுத்தார்கள். அந்த வகையில் சில்க் ஸ்மிதாவை அடுத்து மக்கள் மனதில் நிற்கும் ஒரு நாயகி தான் ரூபிணி. இவரின் நிஜப்பெயர் கோமல் மஹுவாஹர். "சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ " என்ற பாடலை கேட்டவுடன் பலருக்கும் கமல்ஹாசனை அடுத்து இவர் தான் நினைவிற்கு வருவார்.
இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, ராமராஜன் மற்றும் மோகன் என் அனைத்து நடிகர்களுடனும் பாரபட்சமின்றி நடித்துள்ளார். இத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 1987 முதல் 1994 வரை தான் நடித்த படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி க வர்ச்சி நடிகைக்கான பணியையும் இவரே செய்தார். க வர்ச்சியை தவறாக எண்ணாமல் அது நடிப்பின் ஒரு பகுதி என்று எண்ணி அதனை முக பாவனைகளில் வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்தார்.
இவர் நடிப்பிலும் சரி, வாழ்க்கையிலும் சரி சரியான முடிவுகளையே எடுத்துள்ளார். க வர்ச்சி நடிகைகள் பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் வாழ்க்கையை இழந்திருப்பது நமக்கு தெரியும். ஆனால் இவர் 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தை என சந்தோசமாக திரைத்துறையை விட்டு ஒதுங்கிவிட்டார். அதற்கு பிறகு இவர் எதிலும் நடிக்கவில்லை. தற்போது 26 வருடங்கள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் "சித்தி 2" என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் திரைத்துறையை விட்டு விலகி, டாக்டருக்குப் படித்து வந்தார் என்று கூட கேள்விப்பட்டதுண்டு. இதோடு ஒரு வாரிசு நடிகரின் தொல்லை தாங்காமல் சினிமாவை விட்டு விலகினார் என்று கூட ஒரு டாக் உண்டு.