விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் நடிகை ரம்பா. 90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கி, ஹிந்தி என பிற மொழி சினிமாக்களிலும் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ரம்பா. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்பாவுக்கு 2010ல் திருமணம் நடந்தது. தற்போது தனது குடும்பத்துடன் கனடாவில் வசித்து வரும் ரம்பாவுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
சுந்தர்.சி இயக்கிய உள்ளதை அள்ளித்தா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ரம்பா அதன் பிறகு அருணாச்சலம், காதலா காதலா, மின்சாரக்கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிறகு இந்திரகுமார் என்பவர் மணந்து கொண்டார் ரம்பா. இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள செய்தி அனைவருக்கும் அ திர்ச்சியை அளித்திருக்கிறது. குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய கார் வி பத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார் ரம்பா. பெரிதாக காயம் எதுவும் இல்லையென்றாலும் ம ருத்துவமனையில் அவருடைய குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரம்பா தங்களுக்காக வேண்டிக்கொள்ளுமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.