"எலுமிச்சம் பழ நிறத்தில் ஜொலிக்கும் அந்த பெண்ணுக்கு இப்போ எலுமிச்சம் பழம் வாங்குறதுக்கு கூட காசு இல்லையாம்."
சினிமா என்றால் விளையாட்டு என்ற எண்ணத்துடன் தான் பலரும் நடிக்கவருகின்றனர். அந்த மாதிரி நினைச்சிகிட்டு நடிக்க வந்தால் அவர்களுடைய நிலைமை என்னவாகும் என்பதற்கு இந்த அம்மணியை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சம் பழ நிறத்தில் ஜொலிக்கும் அந்த பெண்ணுக்கு இப்போ எலுமிச்சம் பழம் வாங்குறதுக்கு கூட காசு இல்லையாம். அதற்கு காரணம் அவரிடம் இருந்த அலட்சியம் மட்டும் தான்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இவரை மட்டும் ஏன் அடித்து துரத்த வேண்டும்? பிழைப்பு தேடி தமிழகத்துக்கு வரும் மக்கள் பலரும் நாளடைவில் இங்கேயே சொந்த வீடு வாங்கிக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். அந்த ஆசையுடன் தான் இவரும் வந்திருக்கார். ஆனால் விதி வலியதாயிற்றே! எனவே இவரால் இங்கு நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
செய்தி வாசிப்பாளராக இருந்த எத்தனையோ பேர் சினிமாத்துறையில் நுழைந்து இப்போ டாப் கியரில் பயணம் செஞ்சிகிட்டு இருக்காங்க. ஆனால் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத இந்த மேடம் 2 படங்களை தாண்ட முடியாமல் தவிச்சிக்கிட்டு இருக்காங்க. ரியாலிட்டி ஷோ மூலம் பப்ளிசிட்டி கிடைக்கும். அதை வைத்து ஈஸியா சினிமாவுல நுழைஞ்சி பெரிய நடிகையாக மாறிவிடலாம் என்ற நினைப்பு இவருக்கு இருந்துள்ளது. இவரு திட்டமிட்டபடி எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. பட வாய்ப்புகளை பெறுவதற்காக கொஞ்சம் அப்படி இப்படி எல்லாம் போட்டோ எடுத்துப்போட்டு பேமஸ் ஆனவங்க கடைசியில புஸ் ஆயிட்டாங்க.
வாய்ப்பை பெறுவது முக்கியமல்ல. கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். படவாய்ப்பு எளிதில் கிடைத்தாலும் அதை வீணடித்துவிட்டார் நம்ம அம்மணி. நடிச்ச படங்கள் இரண்டும் அட்டு பிளாப். படத்தில் இவர் இருக்கார் என்று தான் சொல்ல முடியும். நடித்துள்ளார் என்று சொன்னால் ரசிகர்கள் கல்லை எடுத்துக்கிட்டு துரத்த ஆரம்பிச்சிருவாங்க.
சுட்டுப்போட்டா கூட உனக்கு நடிப்பு வராது. நீயெல்லாம் எதுக்கு நடிக்க வந்த என்று திட்டாத குறைதான். நீங்க தமிழ் சினிமாவுக்கு வேணாம் என்று இயக்குனர்கள் பலரும் இவரை நிராகரிக்க தொடங்கிவிட்டனர். இவர் போக நினைத்தது உச்சத்துக்கு என்றாலும் தற்போது அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அங்கிருந்து மீண்டு வந்து சிறந்த நடிகையாக மாற முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் கூற வேண்டும். வெறும் கவர்ச்சியை மட்டும் வெச்சிக்கிட்டு சினிமாவில் ஜொலிக்க முடியாது என்பதை இன்றைய தலைமுறையினர் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.