notification 20
Misc
#Toilet: போகும் வழியில் ஆத்திர அவசரம் என்றால் பெட்ரோல் பங்க் போங்க! உள்ளே விடமாட்டேன் என்றால் என்ன செய்யலாம்?

இந்த தகவல் இரண்டு வருடங்களுக்கு முன்பே பேஸ்புக்கில் வைரலானது என்று நினைக்கிறேன். இருந்தாலும், இப்போது இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்த சந்தேகம் வரலாம். இதிலும் மக்களுக்கு தெரியாத புதிய ஒன்றை சொல்லப்போகிறேன். எங்காவது பயணிக்கும் போது, பொதுவெளியில் அவசரம் என்றால், எங்கடா கழிவறை இருக்கும் என்று கண்கள் தேடும். ஆணாக இருந்தால், சின்ன சந்து கிடைச்சா போதும், பட்டுன்னு போயிட்டு சட்டுன்னு வந்துருவாங்க. இதுவே பெண்களின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

இந்த சிக்கலை எல்லாம் உணர்ந்த அரசு, ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் கட்டாயம் கழிப்பறை, குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை நாம் பெட்ரோல், டீசல் போடும் போதும், இதற்கான தொகையையும் சேர்ந்தே தான் செலுத்துகிறோமாம். இனிமேல் ஏதாவது லாங்க் ட்ரிப் போகும் போது, வழியில் அவசரம் என்றால், கூகுள் மேப்பில் பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது என்று தேடினாலே வேலை முடிந்தது.

இருந்தாலும், பல ஊர்களில் தேசிய அளவில் பிரபலமான பெட்ரோல் பங்கில் பாத்ரூம் வசதி இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் ரிப்பேர், மோசமான கண்டிஷனில் இருக்கும். அதேபோல் காற்று பிடிக்கும் வசதியும் இருக்காது. இருந்தாலும் வேலை செய்யாது. பிடிக்க ஆள் இருக்காது. மார்க்கெட்டிங் மேனேஜர்கள் இதெல்லாம் கவனிக்க வேண்டும் என்ற ஆதங்கம் உங்கள் மனதில் இருந்தால் மட்டும் போதாது. நாமளே ஸ்டெப் எடுக்கவும் முடியும்.

சில பெட்ரோல் பங்குகளில் கழிவறையை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னாலும், இனி இந்த வழிமுறையை கையாளுங்கள். மேலே சொன்ன தகவல் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் புதிதாக இருக்கும். ஒரு பெட்ரோல் பங்கில் என்ன குறை இருந்தாலும், அதனை Swachhta என்ற மொபைல் ஆப் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தலாம். இது குறித்து இந்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு தகவல் சொல்லும். அவர்கள் குறிப்பிட்ட பெட்ரோல் பங்கின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். எல்லாம் தெரியாத வரைக்கும் தான், நம்முடைய தலையில் மிளகாய் அரைக்கப்பார்ப்பார்கள். மக்களுக்கு புரிதல் வந்துவிட்டால், இனி ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும், தட்டிக்கேட்டுவிடுவார்களோ என்ற பயம் வரும்.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts